தமிழர் வரலாற்றில் கடவுள்கள் கடவுள் வழிபாடு பற்றிய தேடலில் சில குறிப்புகள்/மதத்தை பற்றிய உங்கள் கேள்விக்கு பதிலும்
எந்த பெரும் நூல்களை(தமிழ்) எடுத்தாலும் கடவுள் வாழ்த்து இல்லாமல் தொடங்கியேதே இல்லை ஆனால் நூால்களுக்கெல்லாம் ஆதியான தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆனால் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது.
"கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'
என்பது தொல்காப்பிய நூற்பா. தொல்காப்பியத்தில் சமயம் அல்லது மதம் என்ற சொல் இல்லை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த முழுமுதற் கடவுள் அல்லது பரம்பொருள் என்ற ஒரு பொருள் படியான கடவுளை தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை.
ஆனா் தொல்காப்பியர் நிலத்தைப் பற்றிக் கூறும்போது நிலத்தோடு தொடர்புடைய தெய்வங்களையும் இணைத்துக் கூறுகின்றார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
விளக்கம் மாயோன் மேவுவது காடுடைய நிலம்.சேயோன் மேவுவது மேகம் சூழ்ந்த மலை உள்ள நிலம் .தேவர் குல மன்னன் மேவுவது மிகுதியான நீர் உள்ள நிலம்.வருணன் மேவுவது மணல் நிறைந்த நிலம்.இந்த நான்கு நிலங்களும் முல்லை,குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர் சொன்ன முறைப்படி சொல்லப்படும். 'மேய' என்பதின பொருள் விரும்பிய என்பதாகும்
முல்லையும் குறிஞ்சியும் திரிந்து காணக்கிடத்த பாலைப் பகுதியில் "கொற்றவை" வழிபாடு நிகழ்ந்ததாக சிலப்பதிகாரம்தான் சொல்கிறது தொல்காப்பியத்தில் எந்த குறிப்பும் இல்லை இந்த கொற்றவைத்தான் இன்றைய பெண் தெய்வ வழிபாடு முன்னர் குறிப்பிட்ட காளிக்கெல்லாம் ஆதி இறைவி...........
அது போல ஆதி என்ற வார்த்தை எடுத்தால் எல்லாம் எங்கிருந்து தொடங்கிட்டு என பார்த்தால் உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக தொல்காப்பியம் சொல்லவில்லை."நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று"அதாவது சமகால அராய்ச்சியாளர்களின் கூற்றை அன்றே தொல்காப்பியம் முன்மொழிகிறது.......
"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்"
ஆதலால் தான பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை இயற்கை வழிபாடு பின் நடுகல் வழிபாடாக மாறியது சங்க காலத்தில் தமிழ் மக்களிடையே வேரூன்றி இருந்தது நடுகல் வணக்கமாகும் அல்லது வழிபாடு........
"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே."--புறநானூறு
அதாவது நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ/பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்று இருக்கிறது.
"தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி..."--குறுந்தொகை
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல்
நோதக் கன்றே தோழி..."--குறுந்தொகை
இந்த பாடல் தமிழர் கலாச்சாரம் , பண்பாடான சடங்கு ,தியாகம் , பலிகளை பற்றிி கூறுகின்றது .மேலும் இந்த பாடல்கள் மதச்சார்பின்மைக் கோட்பாடு(பாடலில் குறிக்கப்பட்ட பகுதி) அல்லது உலகியல்வாதம் அந்த காலத்தில் நிலைவியதை காட்டுகிறது..........
சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள் .உதாரணமாக உயர் உடம்பு பற்றிய கோட்பாடுகள் , ஊழ் , விதிகளின் முதன்மை, ஒரு புனிதமான நோக்கம் காரணத்திற்காக மரணிப்பது போன்றவைகளை.
அதுபோல நாம் சொல்லும் கோயில் எனும் சொல்் சங்க காலத்தில் ஆலயம் -நகர் ,கோயில் ,கோட்டம், புரை அல்லது தேவாலயம் என அழைக்கப்பட்டது .
கோவில் என்பது அரசன் வீடு என பொருள் படும் – கோ + இல்-.
‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ என பட்டினப்பாலை கூறுகிறது இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .
‘வேறு பட்ட வினை ஓவத்து வெண்கோயில்’ என பட்டினப்பாலை கூறுகிறது இதன் கருத்து பல நிற பூச்சு ஓவியங்களை உடைய வெள்ளை அரச மாளிகை ஆகவே சங்க காலத்தில் இது அரச மாளிகைக்கான சொல் ஆகும் .
அரசனுக்கான இன்னும் ஒரு சொல் இறைவன். ஆகும் .
"நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்" என பட்டினப்பாலயும் ,
"நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள்" என பட்டினப்பாலயும் ,
"நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" எனபுறநானூறும் கூறுகிறது .மேலும் தொல்காப்பியர் மூவேந்தரை "புகழ் மூவர்" என அழைக்கிறார் பண்டைய தமிழர் அரசனையே கடவுளாக அல்லது கடவுளின் தூதுவராக வழி பட்டனர் என அறிய முடிகிறது ...........
இப்படி தொல்காப்பியம் முதல் பரிப்பாடல் முதலான நூல்களின் மூலம் பண்டைத்த தமிழர் வழிபாடு என்பது இயற்கையையும், சமகாலப் போர் வீரனயும் முன்னோரயும் மட்டுமே வழிபட்டு வந்தது எடுதுக்காட்டாக இன்றைய தென் மராட்டியம் தொட்டு தமிழகம் இலங்கை மலாயம் வரை உள்ள இந்துக்களை உங்கள் குலதெய்வம் யாரென கேட்டால் முருகனோ மாடனோ எல்லம்மாவோ இசக்கியே ஐயனாரோ முனீசுவரனோ என முன்னோர் வழிபாடுதான் (இந்த பதில்களை கேக்கமே்போது நான் வணங்கும் அந்தோனியாரும் ஜார்ஜியாரும் செபத்தியாரும் குழந்தை தெரசாவும் தாய் மரியும் தான் என் நினைவில் வந்து போவார்கள்) பதிலாக வரும்.இப்படி மதம்பீடிக்காமல் வாழ்ந்த நம் மண்ணில் இன்று மதங்கள் பரப்பும் அன்பும் அறமும் அன்றும் மக்களிடம் வியாபித்திருந்து தமிழரின் திருமறையாம் வள்ளுவத்தை படித்தால் அன்பை போற்றும் இடங்கள் பல இருக்கும்........
ஆக அன்பும் அறணுமாய் மதமற்ற புனித நிலையில் வாழ்ந்த தமிழ்நிலத்தில் மதம் வந்ததெல்லாம் இன்றைய ஆப்பிரிக்காவில் இருந்து அதாவது இன்றைய துருக்கி எகிப்து இஸ்ரேல் போன்ற நிலப்பரப்பில் இருந்து ஆடு மாடுமேய்த்தபடி ஈரான் பலுச்சிஸ்தான் வழி கைபரும் போலனும் திறந்திருந்ததால் சிந்து சமவெளியல் குடிகொண்ட ஆரிய படையெடுப்புடன் தொடங்கியது தான் இந்தியாவின் மதமும் மதச்சண்டைகளும் .......
முதலில் சைவம் வந்தது அதன் பின்னே வைணவமும் வந்தது இங்கே சைவமும் வைணவமும் முட்டி மோதிக்கொண்டன தசாவதாரம் திரைப்படுத்தை தொடக்ககாட்சி அதைத்தான சித்தரித்திருக்கும்(அதில் நெப்போலியனை தமிழ் மன்னனாக காட்டி பெருமாளை கடலில் துாக்கி போட வைத்தது கூட கமலின் ஆரிய மேதாவிதனத்தின் உச்சநிலல).பின்னர் பௌத்தமும் சமணமும் வந்தது சோழ மன்னர்கள் துனையுடன் பௌத்தம் வளந்தது அதுபோல சமணம் சேர நாடு வரை பரவி இருந்தது குமரியின் சிதறால் மலைக்கோவில்தான் அதன் சான்று.முகமதியர்கள் கொண்டு வந்த இஸ்லாமும் வந்தது............
கிறுத்தவம் வந்தது சமாதானத்தயும் அமைதியையும் போதித்த ஒரு மாசற்ற மார்க்கமாக திகழ்ந்து இன்று சுயநலவாதிகளிடம் சிக்கி கிறுத்துவ மதம் படும் பாட்டை பார்க்கும்போது இந்துத்வா வாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகும் பெரும் வாழ்வியல் முறையான இந்து மதம் தான் நியாபகம் வரும்........
இன்று பெங்களூர் வரை சாத்தானிசம் எனும் இலுமினாட்டிகள் உருவாக்கிய சர்ச் ஆப் சாத்தான் எனும் மதம் வந்திருங்கியாகிவிட்டது.அந்த இரகசிய மதக்குழுவில் இருந்து மீண்டெழுந்த நன்பர் ஒருவர் சொன்ன கதைகளை கேட்டால் நெஞ்சடைத்துவிட்டது...........
ஆக மதங்களெல்லாம் காலமாற்றத்தில் உருவானதுதான் நான் மேலேச் சொன்ன சாத்தானிசத்தை தவிர மற்ற எல்லா மதங்களும் பண்டைத் தமிழரின் அன்பையும் அறத்தயும் தான் போதிக்கிறது.மதங்களை தெரிந்துக்கொள்வதில் தவறில்லை மதவெறியர்களாக இருப்பதுதான் தவறு........
இஸ்லாத்தை படித்து பாருங்கள் அதன் வேதநூலான குரானை படித்தால் விவிலியம் படித்த ஒரு உணர்வு கிடைக்கும நாம் தியாகம் என வெறும் சொல்லாக சொல்வதை அவர்கள் ஈகைத்திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள் ஒரு மாத ஒறுத்தலோடு ஈகையை கடைப்பிடிப்பார்கள் ஈகைத்திருநாள் காலெங்களின் எனக்கு எம்பெருமான இயேசுநாதர் செயத தியாகம் தான் நினைவிற்கு வரும். நமது இறுதி தீர்ப்பு நாளுக்கும அவர்களது இறுதி தீர்ப்பு நாளுக்கும் பெரும் வித்தியாசம் ஒன்றுமில்லை.... ..........
அர்த்தமுள்ள இந்து மதம் படித்து பாருங்கள் இந்து மதம் புரியும் அவர்களின் கீதையை படித்து பாருங்கள் தர்மத்திறகு விளக்கும் கிடைக்கும்.....
மதத்தை மதமாக பார்க்காமல் வாழ்வியல் முறையாக பாருங்கள் எல்லாம மதமும் உரக்கச் சொல்லும் உண்மை புலப்புடும்......... அந்த உண்மை புரியாமல் தான் மாற்று மதங்களை மத நம்பிக்கையை குறை காண முடிகிறது அவர்களது நம்பிக்கை முறையை நகையாட முடிகிறது ஆனால் கண்ணை மூடிக்கொன்டு ஏஞ்சல் டிவியில் லயித்துக்கிடக்குறீர்கள் ஒருவேளை அதன் முதலாளி சாது சுந்தர் செல்வராஜ் கடவுள் சிடி குடுத்தார் என சொல்லித்திரியும் பொய்தான் உங்களை ரசிக்க வைக்கும்போல ...............
சத்திய கிறுத்ததுவர்களாக உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு ஒரு வட்டத்தினுள் சிக்கி கிடக்கும்போது உலக வாழ்க்கையில் ரசிக்க முடியாமல் போகும் விடயங்கள் பல உண்டு அதில் ஒன்று தான் மாற்று மதங்களின் அழகியல்.அந்த அழகியல் என்பது ஒருவித உணர்வு அது அகக்கண் திறந்தால் மட்டுமே காணக்கிடைக்கும் கண்கொள்ளா காட்சி.உங்களை அந்த உணர்வுக்குள் இழுத்துச்செல்லவில்லை தயவு செய்து அதை கொச்சைபடுத்தாதீர்கள் அவர்களது வழிபாட்டு முறைகளை பழித்துரைக்காதீர்கள்.அந்த அழகியலை ரசித்தவாரே கிறுத்தவனாக வாழ்ந்துக்கொள்கிறேன் அது பாவம் என்றோ அது பெரும்பிழையென்றோ நீங்கள் சொல்லலாம் ஆனால் தேவமகன் சொல்லமாட்டார்..........
மதங்களை பிடித்து தொங்குங்கள் பைபிளில் மட்டும் மூழ்கி கிடங்கள் ஆனால் மதவியாபாரிகளிடம் கவனமாக இருங்கள்..........
No comments:
Post a Comment