வயது முதிர்ந்து பாரமாக மாறிவிடும் மனிதர்களை பாறாங்கல்லை போல ஈரமில்லா மனமாக மாறிவிட்ட பிள்ளைகளே கொலை செய்யும் தலைக்கூத்தலை அப்படியே உண்மையாக எடுத்திருக்கும் படம்........
கேடி எனும் கருப்பு துரை என்று இதற்கு முன்பாக வந்த திரைப்படம் இதை அடிப்படையாக வந்த படமென்றாலும் அந்த படத்தின் நோக்கம் வேறு இந்த படத்தின் நோக்கம் வேறு அதில் சினிமா தன்மையுண்டு இதை ஓரளவு ராவாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.........
மகனோடு செட் ஆவாத முதியவர் பழனிச்சாமி இரவு காவலாளி வேலை செய்து தங்கை குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். ஒருநாள் காலை வேலை செய்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டு இடுப்பு எலும்பு முறிந்துவிட மகனால் ஊருக்கு அழைத்து செல்லப்பட்டு அவரது சிகிச்சைக்கு பணம் செலவு செய்ய மனமில்லாத அவனால் கருனைக்கொலை செய்யப்படுகிறார்........
இந்தியா முழுவதும் பல்வேறு பெயரில் நடக்கும் தலைக்கூத்தல் எனப்படும் இந்த பச்சை படுகொலையை மனதில் சிறுதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எப்படி நியாய படுத்துகிறார்கள் என்பதையும் பாரம்பரியமாக நடந்து வருவதால் மக்களால் ஏற்றுக்கொள்ளபடுகிறது என்று படத்தின் கதை மாந்தர்கள் வழியாக விளக்கியவிதத்திலும் படத்தை பாராட்டலாம்.......
முதல் பாதியில் அந்த காயம்பட்ட முதியவரை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அலைக்களிக்கும் காட்சியை போன்ற ஒரு காட்சியை நான் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். தொண்ணூற வயதில் முதிர்ந்த தந்தையை காயப்படுத்திய மகனை அறிவேன். படுக்கையாகி போன தாயார் சாப்பிட்டால் எங்கே பேதியாகி கழுவ வேண்டி வருமோ என்று பட்டிணி போட்டவர்களை பற்றியும் கேள்வி பட்டிருக்க்கிறேன். நான் மேலே சொன்ன மூன்று நிகழ்விலும் அந்த பெற்றோர் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக பாசம் கொடுத்து வளர்த்தவர்கள் தான்.மனிதர்கள் எப்படி மாறிவிடுகிறார்கள் பாருங்கள்............
முதல் பாதியில் அழுத்தத்தை கடத்திய திரைப்படம் இரண்டாம் பாதியில் தொட்ட கதைக்கான அழுத்தத்தை தர தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பசாமியின் கொலைக்கு பின்பான காட்சிகள் அப்படியே ஒரு டாகுமென்ட்ரியாக போகிறது........
முதுமை காரணமாக பெற்றவர்களை கொடுமை படுத்தும் அல்லது வயதானவர்களை அந்த வலியில் இருந்து விடுவிக்கிறோம் என்று கருனை கொலை செய்த/செய்ய யோசித்திகொண்டிருக்கும் தலைக்கூத்தலை பாரம்பரியமாக கொண்டவர்களை ஒருமுறை தங்களை தாங்களே கேள்வி கேட்க வைக்கும் ஒரு பாடம்.........
படம் முடியும் போது மனதில் பாரமாக இறங்கியருக்க வேண்டிய கதை திரைக்கதையின் அழுத்தமின்மை காரணமாக இரண்டாம் பாதியில் ஒரு டாக்குமென்ட்ரியாக மாறிவிடுகிறது........
யாரும் தொடாத கதைகளை தொடும் இயக்குனர்கள் தமிழில் மிக மிக குறைவு என்பதால் உண்மை நிகழ்வுகளை சரியாக கையாண்டு தேசிய விருது பெற்ற இயக்குனரை பாராட்டியேயாக வேண்டும்......
நன்றி
#கிழவனார்
#கிழவனார்
No comments:
Post a Comment