Pages

Thursday, April 2, 2020

Trance- பரவசம்/சுயம்மறந்த நிலை

Trance- பரவசம்/சுயம்மறந்த நிலை


“இறைவாக்கு உரைப்பதை தவிர்த்து பரவசபேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியடைய செய்கிறார்” என்கிறது இறைவசனம்.
ஆம் பரவசம் பேசுபவர்கள் மக்களை பரவசபடுத்தி அவர்களை சுயம் இழக்க வைத்து முட்டாளாக்குவதோடு மதங்களை கேலிக்கூத்தாக்கி தம்மையும் தம்மோடு சேர்ந்த சமூக விரோத கும்பல்களயும் வளர்ச்சியடைய வைக்கிறார்கள் என்ற உண்மையை போட்டு உடைக்கிறது ட்ரான்சு திரைப்படம்...........
குமரியில் வசீகர பேச்சுகளால் மக்களை கவர தெரிந்தவர்களில் சிலர் வாழ்க்கையில் உழைத்து வாழ திறனில்லாது மத புத்தகங்களை எடுத்து கொண்டு உண்டியல் குலுக்கி பிழைத்து கிடப்பதாலோ என்னவோ படத்தின் கதாநாயகனை குமரி காரனாக எழுதியிருக்கிறார் வின்சன்ட் வடக்கன்........
வாழ்க்கையில் எல்லாம் இழந்த உறவுகளின் தற்கொலையால் சிறுது மனம்பிறழ்ந்த குமரியை சேர்ந்த மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கர் விஜு பிரசாத் மும்பையில் தஞ்சமடைகிறார். இவரது பேச்சு திறமையால் மதம் எனும் போதையை விற்கும் கார்ப்பரேட் கும்பலால் தேர்ந்தெடுக்கபடுகிறார். அவர் விற்க தொடங்கிய மதம் எனும் போதை மக்களை என்ன செய்தது அவரை எங்கே கொண்டு விட்டது என்பதை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் அன்வர் ராசீத்..........
திருநெல்வேலி பக்கம் இயங்கும் சில விவிலிய கல்லூரிகளில் நடப்பதுபோல் க்ராஷ் கோர்சில் பைபிளை படித்து தேர்ச்சி பெறுகிறார் கதாநாயகன் பின்பு திலீஷ் போத்தனில் பயிற்சியில் மேடை உச்சரிப்பு பரவச பேச்சு கற்கிறார். நான் நாரோயிலில் இருந்த வீட்டின் பக்கத்து வீட்டுக்கார அண்ணாச்சி பலசரக்கு கடை வியாவாரம் கைகொடுக்காத நேரத்தில் மதபிரச்சாரத்தை தொடங்கினார். அவரது தொடக்க காலத்தில் இரவானால் அவர் பல முன்னனி மதவிற்பனர்களின் வீடியோவை ஓடவிட்டு கையை மைக் போல் வைத்து பரவச பேச்சு கற்பார் அந்த காட்சி அப்படியே படத்தில் வந்திருந்தது. கொஞ்சம் பைபிள் வசனங்கள், கொஞ்சம் மாற்றுமொழி, கொஞ்சம் ஊக்கமருந்து நிறைய பரவச பேச்சு படத்தின் கதைநாயகன் ஜோசுவா கார்ல்டன் JC தயார். JC- jesus christ.......
பகத் JC யாக வாழ்ந்திருக்கிறார் குமாரசெல்வாவின் குன்னிமுத்து நாவலில் வரும் தெங்கேறி ரபேக்காவை அப்படியே கோர்ட் போட்டு நம் கண்முன்பே நிறுத்துகிறார். தமிழகத்தின் தென்மாவட்ட மதவிற்பனர்கள் அனைவரயும் ஒரு காட்சியிலாவது உங்கள் முன்பு வந்து போவார்கள். JC கொடுக்கும் தொலைக்காட்சி பேட்டியில் நெல்லையின் மூத்த மதவிற்பனையாளர் ஒருவரின் அதே தற்கொலை சவடால். அதே போன்று அவரது மகனின் இன்றைய மத நிறுவனத்தை போல் உலகமெங்கும் எங்கும் முன்னூறு கிளைகளுடன் JCயின் மதநிறுவனம் அசுர வளர்ச்சி பெறுகிறது.......
பரவச பேச்சில் விழும் எளியவர்கள் எந்த அளவுக்கு பாதிக்க படுவார்கள் எனபதை போலி போதகர் JCயின் பேச்சை கேட்டு மகளை இழக்கும் வினாயகனின் கதை எடுத்து வைக்கிறது. அப்படி ஒரு மதவியாபாரியால் முழு பைத்தியமாகி வாழ்க்கையை தொலைத்த ஒரு நன்பரின் சகோதரனை நான் அறிவேன். பரவச பேச்சு பேசும் அனைத்து டுபாக்கூர் விற்பனையார்களையும் மக்கள் முன்பு எடுத்து வைத்ததில் சில குறைகள் இருந்தாலும் இந்த படம் மிக முக்கியமான படம்.கேரளத்தின்/ தமிழகத்தின் அனைத்து மதவியாபாரிகளயும் கலங்கடித்த படம். இந்த மதபோதையில் விழுந்து கிடக்கும் அப்பாவிகளுக்கான பாடம்.........
பகத்பாசில், ஶ்ரீநாத் பாசி, வினாயகன், நஸ்ரியா & அமல் நீராட் ஸ்டீல்ஸ் த சோ.......
I am a believer but i am againsts the corparatisation of spirituality- vincent vadakkan........

No comments:

Post a Comment