Pages

Thursday, January 16, 2020

கிறுத்தவத்தில் சாதி அடையாளம்

கிறுத்தவத்தில் சாதி அடையாளம் 



    கிறுத்தவத்தில் சாதி அடையாளம் என்று தலைப்பு  தான் இந்த கட்டுரைக்கு சரியானதாக இருக்கும். சமீபகாலமாக தென்தமிழகத்தில் அதிலும் குறிப்பாக  குமரி,நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சில சாதிய அமைப்புகள் கத்தோலிக்க திருச்சபை ஒரு சாதி சார்பாக நடந்து கொள்கிறது. அவர்களது கொடிகளில் ஆலயங்களில் மற்றும் பாதிரியார்களின் உடைகளில் நங்கூரம் மற்றும் மீன் முக்கியமான சின்னமாக  இடம்பெறுகிறது. இந்த மூன்று மாவட்டத்தில் கத்தோலிக்க பாதிரியார்கள் அதிகமாக மீனவ சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் அதனால் தான் அவர்களது சாதிய/தொழில் அடையாளத்தை ஆலயங்களின் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றும் இதேபோன்ற சமவலிமையுடன் அல்லது அவர்களுடன கூடதலாகவே இருக்கும் மற்றொரு சமுதாயத்தின் சின்னமான  பனையையும் பாதிரியாரின் அங்கிகளிலும் சேர்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக குழித்துறை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கொடியில் பனை மரத்தை சேர்த்தேயாக வேண்டும் என்று சாதி உணர்வாளர்கள் ஒரு வாதத்தயும் முன் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். கிறுத்தவ மத அடையாளங்களையும் அதன் வரலாற்றயும் சரிவர புரிந்து கொள்ளாத காரணமும் தன்னை சுற்றி என்ன நடந்தாலும் அதை வேரொறு சாதியுடன் இனைத்தே சிந்திக்கும் சாதியோபோபியோவும் தான் இதற்கு காரணம்............

          கிபி மூன்றாம் நூற்றாண்டுவரை கிறுத்தவ மதமானது பெரிதாக பரவியிருக்கவில்லை வரலாற்றை புரட்டி பார்த்தால் கிறுத்தவ மத நம்பிக்கையாளர்கள் பெருங்கொடுமைகளுக்கு ஆளாக்க பட்டிருந்தனர்.கிறுத்தவ மதத்தை பரப்புவபர்களோ அல்லது கிறுத்தவ நம்பிக்கையாளர்களோ  படுகொலை செய்யப்பட்டனர்.இதனால் கிறுத்தவர்களை தங்கள் அடையாளங்களை மறைத்து தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளவும் தங்களை மதநம்பிக்கையாளர் என்று ரகசியமாக அடையாளபடுத்தி கொள்ளவும் சில சங்கேத சின்னங்களை உபயோகித்தனர் அவற்றுள் மிக பிரபலமானவை ஸ்டாரோக்ராம், மயில், பெலிகான், மீன் , ஆல்பா மற்றும் ஓமேகா, CHI-RO, IH, IX மற்றும் நங்கூரம். ஒவ்வொரு சின்னங்களுக்கும் ஒவ்வொரு கிறுத்தவ வார்தைகளின் அர்த்தம் இருந்தது அதில் எந்த ஒரு சாதிய நிலைப்பாடோ இருந்திருக்கவில்லை..........

நங்கூரம் 

     “ இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்துற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரம் போன்று உள்ளது” எபரியேர் 6:19 இல் உள்ள வாசகம் கூறுவது போல ஒன்றாம் நூற்றாண்டு
கிறுத்தவர்கள் நங்கூரத்தை எதிர்பார்ப்பின் நம்பிக்கையின் சின்னமாக  கொண்டிருந்தனர். முதலாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையான பெரும்பாலான கிறுத்தவ கல்லறைகளில் நங்கூரம் சின்னமே பதியபட்டிருந்தது. கிறுத்தவ இறை ஏற்றவர்கள் நங்கூரத்தை நம்பிக்கையின் சின்னமாக பல கல்வெட்டுகளில் பதிந்தருந்தனர். ரோமில் ஒரு கல்லறை தோட்டத்தில் மட்டும் எழுபது கல்லறைகளிள் நங்கூரம் பதியப்பட்டிருந்தது. முதலாம் நூற்றாண்டு புனிதையான தொமிதிலம்மாள் கல்லறையில் நங்கூரம் பதியபட்டிருக்கிறது அதே போன்று ஒன்றாம் நூற்றாண்டில் கொடும் தண்டைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புனித பிரிஸில்லா அவர்களின் கல்லறையிலும் நங்கூரமே பதிக்கபட்டிருந்தது. ஆக மறு உலக வாழ்வின் கிறுத்தவ வாழ்வின் கிறுத்து வருகையின் எதிர்பார்ப்பின் நம்பிக்கையே நங்கூரம் ஒரு சாதிக்கோ இனத்திற்கோ சொந்தமானதல்ல நங்கூரம். நான்காம் நூற்றாண்டிற்கு பின்பு கிறுத்தவம் வலிமையடைய தொடங்கியபின் கல்லறைகளில் மட்டுமே பதிக்க பட்டிருந்த நங்கூரமானது ஆலயத்தில் ஆலய பனியாளர்களின் உடைகளிலும் ஆயர்களின் கொடிகளிலும் வர தொடங்கியிருந்தது அதன் தொடர்ச்சியே இன்று வரை நாம் காணும் கிறுத்தவ மதத்தின்  நங்கூரம் சின்னம்..........

மீன் சின்னம் 

        இரண்டாம் நூற்றாண்டு காலம் தொட்டு  இயேசுவின் மீன் என்று அழைக்கப்படும் இந்த சின்னமானது இன்றுவரை எல்லா கத்தோலிக்க வழிபாட்டு தலங்களிலும் பாதிரியார்களின் உடைகளிலும் கொடிகளிலும் பதிய பட்டு வருகிறது. ரோம பேரரசு காலத்தில் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட கிறுத்துவ இறை நம்பிக்கையாளர்கள் கிரேக்க மொழியின் மீன் எனும் வாக்கியத்தை கிறுத்துவோடு பொருத்தி அது ரகசிய சின்னமாக உபையோகித்து வந்தனர். கிரேக்க மொழியில் மீனுக்கு ICHTHYS/IXNYY என்று பெயர் அதில் 

I -ஐயோட்டா இயேசுவை குறிக்கவும்
X - Chi கிறுத்துவயும்
N - Theta கடவுளயும்
Y - upsilon மகனயும்
Y - sigma இரட்சகரயும் குறிக்கும்

“இயேசு கிறுத்து கடவுளின் மகன் இரட்சகர்” இதுதான் இந்த இயேசுவின் மீனின் அர்த்தமே அன்றி அது எந்த சாதியின் குறியீடல்ல . அந்த காலத்தில் மறைவாக சந்திக்கவும் தங்களை தங்களுக்குள் அடையாள படுத்தவும் கிறுத்தவர்கள் இதை பயன்படுத்தி கொண்டார்கள் 

என் பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரை பிடிப்பவர்கள் ஆக்குவேன்” - மத்தேயு 4: 19 என்ற வாசகம் தொடங்கி மத்தேயு மற்றும் யோவானின் அதிகாரங்களில் பல இடத்தில் மீன் சுட்டபட்டுள்ளது. ஆக இது கிறுத்தவ நம்பிக்கையின் சின்னம் இயேசு உலக இரட்சகர் என்று நம்பவைத்த சின்னம் அதனால் தான் இன்று கிறுத்தவத்தின் பல சபைகளில் மீன் ஒரு முக்கிய குறியீடாக இடம் பெற்றிருக்கிறது..........

        இதுபோல ஸ்டாரோக்ராம் ஆனது கிரேக்க எழுத்துகளை அடிப்படையாக கொண்டு வார்தையை பிரதிபலிப்பதாகும். XP என்பதை கிரேக்கத்தில் Chi- Rho என வாசிக்க வேண்டும் அது கிறுத்து என்ற அர்த்தத்தில் இயேசுவை குறப்பிடுகிறது . இப்படி நாம் கத்தோலிக்க ஆலயங்களிலோ அல்லது பழைய ஆர்த்தோடக்ஸ் ஆலயங்களிலோ பார்க்கும் எல்லா  சின்னங்களுக்கும் பின்பு ஒரு அர்த்தம் உண்டு அது சாதி குறியீடு அல்ல அது கிறுத்தவ நம்பிக்கையின் குறியீடு
சிலுவையை சுட்டுவதாகும் . கிரேக்கர்கள் மயிலின் உடலானது சிதையாது என்று நம்பியதால் மயில் அழிவில்லாத ஆன்மாவை குறிப்பிடுவதாகவும். ஐரோப்பியர்கள் பெலிகான் பறவை இரை கிடைக்காத நேரத்தில் தன் உடலின் இரத்தத்தை தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும் என்று நம்பியதால் இயேசு சிந்திய இரத்தத்தை குறிப்பிடுவதாகும். கிரேக்க முதல் எழுத்தான ஆல்பாவும் கடைசி எழுத்தான ஒமேகா இனைந்திருக்கும் சின்னமானது நானே முதலும் முடிவுமாய் இருக்கிறேன் என்ற விவலியத்தின்

கிறுத்தவத்தில் சாதி வெறியிர்கள் அல்லது பற்றாளர்கள் அல்லது உணர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆட்கள் உண்டு ஆனால் கிறுத்தவத்திற்கு சாதி, இனம் , மொழி என்று எந்த பாகுபாடும் இல்லை. ஆலயத்திற்குள் வரும்போது உங்கள் உடலை அல்ல உங்கள் உள்ளத்து கழுவி விட்டு வாருங்கள் என்று சொன்ன மதத்தில் இருந்து கொண்டு சாதியை உங்கள் உள்ளத்தில் தூக்கி கொண்டு ஆலயத்திற்குள் வராதீர்கள். அன்புக்குரியவர்களே சாதி வளக்க ஆயிரம் இடங்கள் உள்ளது அது ஆலயத்திற்குள் வேண்டாம். ஆலயத்திற்குள் வரும்போது உங்கள் செருப்புகளின் கூடவே சாதியையுப் உதறிவிட்டு வாருங்கள்..............,


நன்றி
குமரிக்கிழவனார்

குறிப்பு: பற்பல காரணங்களால் மத ஆராய்ச்சிகளில் இருந்து தூர போயிருந்தேன் இன்று நம்ம சாதியோபோபியா ஆட்கள் கொஞ்சம் மத ரீதியாக ஆராய வைத்துவிட்டார்கள் அவர்களுக்கு சிறப்பு நன்றி........
 

No comments:

Post a Comment