#அலுவாலியா_என்ற_கலால்_வகுப்பினர்
இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் லாகூர் மற்றும் இந்தியப் பஞ்சாபின் பகுதியில் வாழ்ந்த ஒரு சமுதாயத்தினர்தான் கலால் சாதியினர். அவர்களது அடிப்படைத் தொழில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி எடுப்பது. சில கலால்கள் மரம் வெட்டுதல் மற்றும் வேறு மரம் சார்ந்த தொழில்களையும் செய்து வந்தனர் .
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்துக்களாக இருந்த அவர்கள் சாராயம் வடிகட்டும் தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வந்த காரணத்தால் வர்ணாசிரமத்தின் சூத்திரர்களுக்கும் கீழான சாதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜசா சிங் கலால் என்ற ஒரு மாவீரர் உருவாகும் வரை வெறும் “சாராயம் காய்ச்சிகளாக” அறியப்பட்ட கலால்கள் பிராமணியத்தின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக வாழ்ந்து வந்தார்கள்.
கிபி 1718 ஆம் ஆண்டு ஜசா சிங் கலால் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் அலு என்ற கிராமத்தில் பிறக்கிறார். ஐந்து வயதிலேயே தன் தந்தையை இழந்த ஜசா சிங் குரு கோபிந் சிங்கின் மனைவி மாதா சுந்தரியால் தத்துப் பிள்ளையாக சீக்கிய மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்படுகிறார்.
இளம் வயதிலேயே வீரராக இருந்த ஜசா சிங் கலால் தன் இனக்குழுவின் "சாராயம் காய்ச்சிகள்", என்ற பெயரை வரலாற்றில் இருந்த அழித்த மாவீரர்.
ஆப்கானிஸ்தான் கான்களுக்கு எதிராக வெறும் இரண்டாயிரம் படை வீரர்களைத் திரட்டி லாகூரைப் பஞ்சாபிற்குச் சொந்தமாக்குகினார். இந்த வெற்றிக்குப் பிறகு அவரின் வீர தீர செயல்களுக்காக லாகூரின் மன்னராக்கபட்டார். பின்னர் ஒட்டுமொத்த சீக்கிய கலால்களுக்கும் தலைவரானார். அதுவரை வெறும் “சாராய காய்ச்சிகளாக” பார்க்கப்பட்ட கலால் சமுதாயத்தினர் சத்ரிய குலமாக தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். ஜசா சிங்கின் பிறந்த கிராமமான அலு வோடு வாலியாவும் சேர்த்து அலுவாலியா என்று சாதி பெயரை மாற்றி அலுவாலியாவாக மாறினார்கள்.
அடுத்த நூறாண்டில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி விற்று வந்த இனக்குழு ஆங்கிலேயர்களுக்கு இனக்கமாக இருந்து தங்களை சத்ரியர்களாக நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இப்படிக் கலால் என்று சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படிருந்த சாதியை நாடாள வைத்த ஜசா சிங் அலுவாலியா(கலால்) அலுவாலியாக்களின் நாயகனாகிறார். அவரது நேரடி வாரிசுகள் அல்லாமல் இந்து சீக்கியர் உட்பட்ட அனைத்து கலால்களும் அலுவாலியாவாக மாறுகின்றனர்.
ஆஸ்கல், ஆக்ரே, பானல், பாவ்ரிஷி, பகத், பாம்ப்ரல், பந்தாரி, பார், பாரூ, பெஜாகடே, பிமாத், போந்த்ரா, காப்ரகான், சாந்தவான், சாணி, துயால் , திவான், கர்சியான், கூன், ஜார்டி, செய்சுவால், ஜான்வாதியா, ஜாரி, ஜஸ்பால், ஜோசன், ஜாஜ், ஜோஷ், காத், காண்டல் ,கண்ணு, கபூர், கென்ட், கெர், லுதாத்தியா, மாத்வாதி, மாலி, மாலிகான்,மாமிக்,நாகி, நீல்,பாப்ரா, பைன்டால், பால், ராணா, ரேக்கி ,ரோஷா, ராத்ரா, சாட், சாந், சம்பி, சிகாட், சிகாந், ச்ரிகாந்த், சுல்ஹயான், தல்வார், துள்சி மற்றும் யாஷ்பால் போன்ற சிறு இனக்குழுக்களும் “சாராயம் காய்ச்சிகளாக” இருந்து சத்ரியர்களாக உயர்ந்த கலால்களோடு அல்லது அலுவாலியாக்களோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இது தான் அலுவாலியா எனப்படும் கலால்களின் சுருக்க வரலாறு. சரி இப்ப எதற்கு இந்த பாகிஸ்தானியர்களை பற்றிய ஆராய்ச்சி என்கிறீர்களா?
அவசியம் இல்லாமல் இல்லை மிக சமீபகாலத்தில் துல்லியமாகச் சொல்வதென்றால் கடந்த ஏழு ஆண்டுகளாக நாடார்கள் சிலர் அலுவாலியா செய்சுவால் போன்ற கலால் இனக்குழுக்களும் நாடார்கள் என்று குறிப்பிட்டு அதிகாரத்தில் இருக்கும் இதன் தலைவர்களோடு செல்பி எடுப்பதும் தாங்கள் அடிக்கும் பேனர்களில் அவர்கள் படங்களை வைப்பதுமாக அமர்க்களபடுத்துகிறார்கள்.
பெரும்பாலும் இவர்கள் நோக்கம் சுயலாப கணக்குகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதேயன்றி சமுதாய முன்னேற்றம் அல்லவே அல்ல. நாடார்களை அவர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்தியத்தின் இந்த இனக்குழுக்களோடு இனைப்பது என்பது தமிழ் சமூகத்தில் இருந்து நாடார்களை தனிமைபடுத்தும் முயற்ச்சி எனவும் சிந்திக்க தூண்டுகிறது
இப்படி ஒருகாலத்தில் கோதுமையில் இருந்து “சாராயம் காய்ச்சும்” தொழில் செய்து வந்த கலால்/ அலுவாலியா இனக்குழுவை நாடார் என்று சொல்பவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டிய ஐந்து கேள்விகள்........?
1.நாடார்கள் என்றாவது சாராயம் காய்ச்சினார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கிறீர்களா...?
2. நாடார்களுக்கும் கோதுமை சாராயத்திற்கும் என்ன சம்பந்தம்....?
3. லாகூரில் கருப்பட்டி பனைமரம் சம்பந்தமான தொழில்கள் என்ன என்ன?
4. திருவாங்கூரில் இருநூறு ஆண்டுகள் சாதி ஒடுக்குதலைத் தவிர்த்து நாடார்கள் அவுட்காஸ்டட் நபர்கள் என்று என்றாவது அழைக்கப்பட்டனரா?
5. அது இல்லாதபோது நாடார்களை உங்களின் சுய லாபத்திற்காக அன்றி வேறு எதன் அடிப்படையில் அலுவாலியா சாதிப் பட்டத்தில் அடக்க முற்படுகிறீர்கள்......?
நன்றி
For read more abt Aluwhalias and check facts on my above post please rfr to:
1. Thee History of Punjab Rise, progress& present condition vol-1 H. Allen &co -1846
2. East of Indus My memories of Old Punjab - Gurnam s.s. Brard
3. Historical Dictionary of Sikhism- Louis E. Fenech
4.A History of the sikhs: From the origin of the nation to the battles of the sutlej- Joseph Davey Cunningham
இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் லாகூர் மற்றும் இந்தியப் பஞ்சாபின் பகுதியில் வாழ்ந்த ஒரு சமுதாயத்தினர்தான் கலால் சாதியினர். அவர்களது அடிப்படைத் தொழில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி எடுப்பது. சில கலால்கள் மரம் வெட்டுதல் மற்றும் வேறு மரம் சார்ந்த தொழில்களையும் செய்து வந்தனர் .
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்துக்களாக இருந்த அவர்கள் சாராயம் வடிகட்டும் தொழிலைக் குலத்தொழிலாகச் செய்து வந்த காரணத்தால் வர்ணாசிரமத்தின் சூத்திரர்களுக்கும் கீழான சாதிகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஜசா சிங் கலால் என்ற ஒரு மாவீரர் உருவாகும் வரை வெறும் “சாராயம் காய்ச்சிகளாக” அறியப்பட்ட கலால்கள் பிராமணியத்தின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப் புறமாக வாழ்ந்து வந்தார்கள்.
கிபி 1718 ஆம் ஆண்டு ஜசா சிங் கலால் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் அலு என்ற கிராமத்தில் பிறக்கிறார். ஐந்து வயதிலேயே தன் தந்தையை இழந்த ஜசா சிங் குரு கோபிந் சிங்கின் மனைவி மாதா சுந்தரியால் தத்துப் பிள்ளையாக சீக்கிய மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்படுகிறார்.
இளம் வயதிலேயே வீரராக இருந்த ஜசா சிங் கலால் தன் இனக்குழுவின் "சாராயம் காய்ச்சிகள்", என்ற பெயரை வரலாற்றில் இருந்த அழித்த மாவீரர்.
ஆப்கானிஸ்தான் கான்களுக்கு எதிராக வெறும் இரண்டாயிரம் படை வீரர்களைத் திரட்டி லாகூரைப் பஞ்சாபிற்குச் சொந்தமாக்குகினார். இந்த வெற்றிக்குப் பிறகு அவரின் வீர தீர செயல்களுக்காக லாகூரின் மன்னராக்கபட்டார். பின்னர் ஒட்டுமொத்த சீக்கிய கலால்களுக்கும் தலைவரானார். அதுவரை வெறும் “சாராய காய்ச்சிகளாக” பார்க்கப்பட்ட கலால் சமுதாயத்தினர் சத்ரிய குலமாக தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். ஜசா சிங்கின் பிறந்த கிராமமான அலு வோடு வாலியாவும் சேர்த்து அலுவாலியா என்று சாதி பெயரை மாற்றி அலுவாலியாவாக மாறினார்கள்.
அடுத்த நூறாண்டில் கோதுமையில் இருந்து சாராயம் வடிகட்டி விற்று வந்த இனக்குழு ஆங்கிலேயர்களுக்கு இனக்கமாக இருந்து தங்களை சத்ரியர்களாக நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். இப்படிக் கலால் என்று சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படிருந்த சாதியை நாடாள வைத்த ஜசா சிங் அலுவாலியா(கலால்) அலுவாலியாக்களின் நாயகனாகிறார். அவரது நேரடி வாரிசுகள் அல்லாமல் இந்து சீக்கியர் உட்பட்ட அனைத்து கலால்களும் அலுவாலியாவாக மாறுகின்றனர்.
ஆஸ்கல், ஆக்ரே, பானல், பாவ்ரிஷி, பகத், பாம்ப்ரல், பந்தாரி, பார், பாரூ, பெஜாகடே, பிமாத், போந்த்ரா, காப்ரகான், சாந்தவான், சாணி, துயால் , திவான், கர்சியான், கூன், ஜார்டி, செய்சுவால், ஜான்வாதியா, ஜாரி, ஜஸ்பால், ஜோசன், ஜாஜ், ஜோஷ், காத், காண்டல் ,கண்ணு, கபூர், கென்ட், கெர், லுதாத்தியா, மாத்வாதி, மாலி, மாலிகான்,மாமிக்,நாகி, நீல்,பாப்ரா, பைன்டால், பால், ராணா, ரேக்கி ,ரோஷா, ராத்ரா, சாட், சாந், சம்பி, சிகாட், சிகாந், ச்ரிகாந்த், சுல்ஹயான், தல்வார், துள்சி மற்றும் யாஷ்பால் போன்ற சிறு இனக்குழுக்களும் “சாராயம் காய்ச்சிகளாக” இருந்து சத்ரியர்களாக உயர்ந்த கலால்களோடு அல்லது அலுவாலியாக்களோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இது தான் அலுவாலியா எனப்படும் கலால்களின் சுருக்க வரலாறு. சரி இப்ப எதற்கு இந்த பாகிஸ்தானியர்களை பற்றிய ஆராய்ச்சி என்கிறீர்களா?
அவசியம் இல்லாமல் இல்லை மிக சமீபகாலத்தில் துல்லியமாகச் சொல்வதென்றால் கடந்த ஏழு ஆண்டுகளாக நாடார்கள் சிலர் அலுவாலியா செய்சுவால் போன்ற கலால் இனக்குழுக்களும் நாடார்கள் என்று குறிப்பிட்டு அதிகாரத்தில் இருக்கும் இதன் தலைவர்களோடு செல்பி எடுப்பதும் தாங்கள் அடிக்கும் பேனர்களில் அவர்கள் படங்களை வைப்பதுமாக அமர்க்களபடுத்துகிறார்கள்.
பெரும்பாலும் இவர்கள் நோக்கம் சுயலாப கணக்குகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளதேயன்றி சமுதாய முன்னேற்றம் அல்லவே அல்ல. நாடார்களை அவர்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத இந்தியத்தின் இந்த இனக்குழுக்களோடு இனைப்பது என்பது தமிழ் சமூகத்தில் இருந்து நாடார்களை தனிமைபடுத்தும் முயற்ச்சி எனவும் சிந்திக்க தூண்டுகிறது
இப்படி ஒருகாலத்தில் கோதுமையில் இருந்து “சாராயம் காய்ச்சும்” தொழில் செய்து வந்த கலால்/ அலுவாலியா இனக்குழுவை நாடார் என்று சொல்பவர்களிடம் நீங்கள் கேட்கவேண்டிய ஐந்து கேள்விகள்........?
1.நாடார்கள் என்றாவது சாராயம் காய்ச்சினார்கள் என்று கேள்விப்
பட்டிருக்கிறீர்களா...?
2. நாடார்களுக்கும் கோதுமை சாராயத்திற்கும் என்ன சம்பந்தம்....?
3. லாகூரில் கருப்பட்டி பனைமரம் சம்பந்தமான தொழில்கள் என்ன என்ன?
4. திருவாங்கூரில் இருநூறு ஆண்டுகள் சாதி ஒடுக்குதலைத் தவிர்த்து நாடார்கள் அவுட்காஸ்டட் நபர்கள் என்று என்றாவது அழைக்கப்பட்டனரா?
5. அது இல்லாதபோது நாடார்களை உங்களின் சுய லாபத்திற்காக அன்றி வேறு எதன் அடிப்படையில் அலுவாலியா சாதிப் பட்டத்தில் அடக்க முற்படுகிறீர்கள்......?
நன்றி
For read more abt Aluwhalias and check facts on my above post please rfr to:
1. Thee History of Punjab Rise, progress& present condition vol-1 H. Allen &co -1846
2. East of Indus My memories of Old Punjab - Gurnam s.s. Brard
3. Historical Dictionary of Sikhism- Louis E. Fenech
4.A History of the sikhs: From the origin of the nation to the battles of the sutlej- Joseph Davey Cunningham
No comments:
Post a Comment